chennireporters.com

மணிப்பூரில் நிர்வாண படுகொலைகள் மௌனம் கலைப்பாரா பிரதமர்.

கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூர் என்னும் மாநிலம் கலவர பூமியாகி ரத்த வெள்ளத்தில் மிதக்கிறது. பழங்குடியின மக்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இரண்டு பெண்களை மைதேயி சமூக இளைஞர்கள் சாலைகளில் நிர்வாணமாக அடித்து இழுத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது .

பாஜக ஆளும் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அம்மாநிலத்தில் வசிக்கும் குகி பழங்குடியின மக்களுக்கு எதிராக மைத்தேயி சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கொடூர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மோடிக்கு எதிராக விளம்பர பலகை ஏந்தி நீதி கேட்ட சிறுமி சுட்டுக் கொல்லப்பட்டார் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள போலீஸ அதிகாரிகள் மைத்தேயி சமுதாயத்தை சேர்ந்த கொள்ளையர்களால் தாக்கப்பட்டு வருகின்றனர்.

மைத்தேயி சமுதாயத்தினர் தங்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில் அதுக்கு எதிராக குகி மற்றும் நாகா பழங்குடியின மக்கள் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி நடத்திய போராட்டத்தை தொடர்ந்து அம் மாநிலத்தில் குகி இன மக்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. இந்தக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் கடைகள் வணிக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இதுவரை அந்த கலவரத்தில் 135 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன . ஆனால் பலி எண்ணிக்கை 500க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருக்கிறார்கள் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் தினம் தோறும் அரங்கேறி வருகிறது. பாதுகாப்பு முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள் பாதுகாப்பு நடவடிக்கைக்காக 50,000 மேற்பட்ட ராணுவ வீரர்கள் மணிப்பூர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமும் தீவைப்பு ,துப்பாக்கி சூடு , வன்முறை ,கலவரம் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன வன்முறையை கட்டுப்படுத்தும் வகையில் மணிப்பூரில் இணையதள சேவைகள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் நாடே அதிர வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. காங்கோக்பி என்ற மாவட்டத்தில் பிபைனோ என்ற கிராமத்தில் மைத்தேயி சமூகத்தை சேர்ந்த ஆண்கள் குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களை அடித்து துன்புறுத்தி சாலையில் நிர்வாணமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு ஏராளமான ஆண்கள் இந்த இரண்டு பெண்களையும் கூட்டாக பலாத்காரம் செய்திருக்கிறார்கள். நெஞ்சை பதை பதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி பெறும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

தாய்மையை போற்றும் இந்த தேசத்தில் பாஜக என்னும் கட்சி வெட்கி தலைகுனிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.  இந்த கொடூர சம்பவம் கடந்த மே மாதம் நான்காம் தேதி நடந்ததாக ஐடிஎல்எப் என்ற பழங்குடியின அமைப்பு தெரிவித்துள்ளது. தாய்மையை போற்றும் இந்த தேசம் மணிப்பூரில் நடந்த இந்த சம்பவத்திற்கு வெட்கி தலை குனிந்து உலக அளவில் இந்தியா என்கிற தேசம் அவமானத்தில் தூக்கிட்டு தொங்குகிறது. உலக நாடுகள் இந்தியாவை காரி உமிழும் நிலையை பாஜக மணிப்பூர் அரசு செய்துள்ளது.

இதையும் படிங்க.!