சிவகார்த்திகேயன் வைத்த இரவு விருந்தில் டி.இமான் தனது முதல் மனைவி மோனிகாவை மட்டும் அனுப்பியது ஏன் என பிரபல பத்திரிகையாளர் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இசையமைப்பாளர் இமான் கொடுத்த பாடல்கள் சிவகார்த்திகேயனை உச்சத்திற்கு கொண்டு சென்றதுடன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அவரை பாடகராகவும் வலம் வர வைத்துள்ளது.
இதன் பின்பு இமான் மற்றும் மோனிகா பிரிவதற்கு காரணமே சிவகார்த்திகேயன் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் இமானின் முன்னாள் மனைவி மோனிகா சிவகார்த்திகேயன் எங்களை சேர்த்து வைப்பதற்கு தான் முயற்சி செய்தார் அதனால் தான் இமான் இவ்வாறு குற்றச்சாட்டு வைக்கின்றார் என்று பதில் அளித்தார்.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் பாண்டியன் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த போது, இவர்களின் சர்ச்சை குறித்து சில விடயங்களை கூறியுள்ளார்.
அதாவது சிவகார்த்திகேயன் நைட் பார்ட்டி ஒன்று வைத்ததாகவும், இதற்கு இமானை அழைத்தார், ஆனால் இமான் அப்பொழுது பிஸியாக இருந்ததால் தனது மனைவியை மட்டும் அந்த பார்ட்டிக்கு அனுப்பி வைத்தார் என்று கூறியுள்ளார்.
மேலும் சினிமாவில் இருப்பவருக்கு இரவு விருந்தில் என்ன நடக்கும் என்பது தெரியாதா? அவ்வாறு தெரிந்தும் இமான் எதற்காக தன்னுடைய மனைவியை மட்டும் தனியாக அனுப்பி வைக்க வேண்டும். குறித்த பார்ட்டிக்கு சென்ற மோனிகா காணாமல் போனதாகவும் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனால் சிவகார்த்திகேயன் பெயர் திரை உலகில் பேசும் பொருளாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயனுக்கு எதிராக ரசிகர்கள் பலர் கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.