chennireporters.com

அழகை காட்டி ஆண்களிடம் பணம் பறித்த பெண்ணுக்கு போலீஸ் வலை.

சுகாசினி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியைச் சேர்ந்தவர் சுனில்குமார்(30) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவரிடம் கடந்த வருடம் ஏ.டி.பி பைனான்ஸ் நிறுவன ஊழியர் எனக்கூறி சுகாசினி என்ற அழகிய இளம் பெண் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் இருவரும் நெருக்கமாக நட்பாக பழகி வந்துள்ளனர்.பின்னர் நட்பு காதலாக மாறியது சுகாசினி தான் ஒரு அனாதை என்று சுனில் குமாரிடம் கூறியுள்ளார் இதனால் சுனில் குமார் சுகாசினி யின் காதல் பலமானது.

சுனில் குமாருடன் சுகாசினி.

இருவரும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர் அப்போது சுனில்குமாரின் பெற்றோர் சுகாசினிக்கு 20 கிராம் தங்க நகையை வாங்கிக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு மருத்துவ செலவுக்கு பணம் தேவைப் படுவதாக தனது காதல் கணவர் சுனில் குமாரிடம் சுகாசினி ரூபாய் 4 லட்சம் கடனாக கேட்டு வாங்கியுள்ளார்.

கணவருக்கு தெரியாமல் மேலும் அதே காரணத்தை சொல்லி மாமனாரிடம் இரண்டு லட்சம் வாங்கியுள்ளார் சில நாட்கள் கழித்து சுனில் குமார் உங்க உறவினர் எப்படி இருக்கிறார்.

பணத்தை எப்போது தருவார்கள் என்று கேட்டுள்ளார்.இன்னும் சில நாட்களில் கொடுத்து விடுவார்கள் என்று சமாளித்துக் ள்ளார்இந்நிலையில் கொடுத்த பணத்தை என்ன செய்தாய் என்று சுனில்குமார் என் வீட்டார் கேட்ட அன்றைய தினமே சுகாசினி வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார்.
இதையடுத்து அவர் செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சுனில்குமார் சுகாசினி பற்றித் தெரிந்துகொள்ள அவரது ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில் சுகாசினி ஏற்கனவே நெல்லூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரிந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனிடையே செந்தில்குமாரின் எண்ணில் தொடர்பு கொண்ட சுகாசினி நான் இப்போது ஐதராபாத்தில் இருக்கிறேன் உங்களது பணத்தை விரைவில் திருப்பி கொடுத்து விடுகிறேன்அதற்குள் என்னை பற்றி போலீசில் புகார் அளித்தால் பெரும் விபரீதத்தை சந்திப்பீர்கள் என்று கூறி மிரட்டியுள்ளார்.

இந்த அதிர்ச்சிக்கு மத்தியில் வெங்கடேசனை போல வேறு ஒருவரை திருமணம் செய்த தற்கான புகைப்படங்களை சுனில் குமார் வாட்ஸ் அப் பெண்ணிற்கு சுகாசினி அனுப்பியுள்ளார்.

சுனில்குமாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சிசுனில் குமாருடன் சேர்த்து மொத்தம் எத்தனை பேரை சுகாசினி ஏமாற்றி திருமணம் செய்திருப்பாரோ தெரியவில்லை என்கிறார் சுனில்குமார் சுகாசினி ஏமாற்றி யது என் குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து சுனில்குமார் அலிபிரி காவல் நிலையத்தில் சுகாசினியின் மீது புகார் அளித்துள்ளார்போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி நெல்லூர் ஐதராபாத் ஆகிய நகரங்களில் சுகாசினியின் புகைப்படத்தை அனுப்பி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க.!