chennireporters.com

அமைச்சர் துரைமுருகன் வீட்டு சொகுசு காரை எரித்த ரவுடி டேனியல் கைது.

அமைச்சர் வீட்டு காரை எரித்து விட்டு போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு தலைமறைவாக இருந்த ரவுடியை சென்னை தனிப்படை போலீசார் விருதாசலத்தில் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். 

திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அவரது மகன் கதிர் ஆனந்த் வீட்டில் வெளிநாட்டில் இருந்து வாங்கிய சொகுசு காரை எரித்த வழக்கில் முக்கிய குற்றவாளி டேனி என்கிற டேனியல் துப்பாக்கி முனையில் கைது  செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

          துரை முருகன் .

சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் பாடி குப்பம் பகுதியை சேர்ந்தவர் டேனியல். பல குற்ற சம்பவங்களில் தொடர்பு உடையவர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அமைச்சர் துரை முருகனுக்கு சொந்தமாக சொகுசு பங்களா ஒன்று இருக்கிறது அந்த பங்களாவில் மூன்று வெளிநாட்டு சொகுசு கார்கள் நிறுத்தி வைக்க பட்டு இருந்தது.

 

                                                                          ரவுடி  டேனியல்.

அதில் ஒரு சொகுசு காரை டேனியல் மற்றும் அவரது கூட்டாளிகள் தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. அந்த வழக்கில் டேனியல்  கடந்த இரண்டு மாதங்களாக தலை மறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் விருதாச்சலத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தங்கியிருந்த டேனியலை நேற்று ( அக்டோபர் 7.10.2023) அன்று நள்ளிரவு 12 மணியளவில் சென்னை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில்  சுற்றி வளைத்து கைது செய்தனர்.

துரை முருகன் மகன் கதிர் ஆனந்த்.

அது தவிர அவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது,இதில் நீதிமன்றம் இவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. அவரை தனிப்படை போலீசார்  சென்னை திருமங்கலம் ஏ.சி. வரதராஜன், இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர், சூர்ய லிங்கம் ஆகியோர் கொண்ட  சிறப்பு படை நீண்ட நாட்களாக அவரை தேடி வந்தனர். இந் நிலையில் விருதாச்சலத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து விருதாசலம் சென்று கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு டேனியலை துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.அவரை சென்னைக்கு அழைத்து வந்து முகப்பேர் அருகில் உள்ள நொளம்பூர் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல ரவுடி டேனியல் மீது  இரண்டு கொலை மற்றும் 5 ந்து கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என தெரிய வருகிறது. பல குற்ற சம்பவங்களை செய்துவிட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் தனிப்படை போலீசார்.

இதையும் படிங்க.!