chennireporters.com

நீட் தேர்வு தோல்வி திருமுல்லைவாயிலில் மாணவி தற்கொலை.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவி நீட் தேர்வில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்து கொண்டதால் திருமுல்லைவாயல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆவடி அடுத்த  திருமுல்லைவாயில் சோழபுரம்  இந்திரா நகரில் வசித்து வரும் அமுதா இவரது மகள்  மாணவி லக்ஷ்மணா ஸ்வேதா அதிகாலை 3:30 மணியளவில் வீட்டில் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உயிரிழந்த மாணவி தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி நீட் தேர்வு எழுதியதாகவும், அதன் ரிசல்ட் நேற்று அதிகாலை 1.45 மணிக்கு வந்ததாகவும், அதில் தான்  தோல்வி அடைந்ததை பார்த்துவிட்டு மன வருத்தத்தில் தனக்குத்தானே ஹாலில் உள்ள கொக்கியில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடலை மீட்ட திருமுல்லைவாயில் காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மாணவி ஸ்வதா இறப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரசு பல விழிப்புனர்வுகளை செய்தாலும் அனிதாவை தொடர்ந்து நீட் தேர்வு மரணம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இதையும் படிங்க.!