chennireporters.com

vellore ; லஞ்சம் வாங்கிய பிரேக் இன்ஸ்பெக்டர் வசந்தி பணி நீக்கம்.

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட கிறிஸ்டியான்பேட்டை  பகுதியில் தமிழக – ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது  வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடி  பிரேக் இன்ஸ்பெக்டராக வசந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 2022 மார்ச் 17-ம் தேதியிலிருந்து இவர் இங்கு பணியாற்றி வருகிறார்.

பிரேக் இன்ஸ்பெக்டர் வசந்தி

இவர் ஆந்திராவில் இருந்து தமிழகம் வரும் வாகன உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்காமல் வாகனங்களை அனுமதிப்பதில்லை என்று வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸாருக்கு கடந்த 10-ம் தேதியன்று தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு  இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் அன்றைய தினமே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பிறகு, பணி முடிந்து பிரைக் இன்ஸ்பெக்டர் வசந்தி வீட்டுக்கு காரில் புறப்பட்டபோது  போலீசாரும், வசந்தியை பின் தொடர்ந்து சென்றனர். சுமார் 25 கி.மீட்டர் தூரம் சென்றபோது, அதாவது ராணிப்பேட்டை சிப்காட்  அருகே உள்ள பாரதி நகர் அருகே வசந்தியின் காரை போலீசார் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். மேலும் அவரது  காரிலும் சோதனை நடத்தினர். அப்போது அவரது காரில்  ரூ.3 லட்சம் ஒரு வெள்ளை கவரில் சுற்றி  வைக்கப்பட்டிருந்தது.  அந்த பணத்தை  போலீசார் கைப்பற்றினர்.

போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் ஐ ஏ எஸ்.

தொடர்ந்து ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள வசந்தியின் வீட்டிற்குள் நுழைந்து போலிசார் சோதனை நடத்தினர். அப்போது  அவரது வீட்டிற்குள் மேலும் ரூ.3.25 லட்சம் கைப்பற்றப்பட்டது. மொத்தம் ரூ.6.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.  கணக்கில் வராத இந்த பணம்  தொடர்பாக வசந்தி எந்த விளக்கமும்  அளிக்கவில்லை.

மேலும், வசந்தியின் வீட்டில் சோதனை செய்தபோது காப்பீடு சம்பந்தப்பட்ட ஏராளமான ஆவணங்களும், அவரது 4 வங்கிக் கணக்குகள் குறித்த ஆவணங்களையும் பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்தனர்.

அதுமட்டுமல்ல, ஆய்வாளர் வசந்தியின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களை சேகரித்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், அவை அனைத்தும் ஆய்வு செய்யப்படும் என்றும் அதில் வருமானத்திற்கு அதிகமாக பணம் இருப்பது தெரிய வந்தால் துறை ரீதியான அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்  தெரிவித்தனர்.

பின்னர் இது தொடர்பான அறிக்கை மற்றும் எஃப்ஐஆர் நகலை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து ஆணையர் ஏ.சண்முகசுந்தரம், இ.ஆ.ப., துறை ரீதியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அந்த விசாரணையில் பிரைக் இன்ஸ்பெக்டர் வசந்தியிடம் கைப்பற்றப்பட்ட பணம் அத்தனையும், முறைகேடாகவும் லஞ்சமாக சம்பாதித்தது என்பது உறுதியானது. இதையடுத்து வசந்தியை தற்காலிக பணி நீக்கம் செய்து போக்குவரத்து ஆணையர் ஏ.சண்முகசுந்தரம், இ.ஆ.ப‌., உத்தரவிட்டிருக்கிறார். இதனால் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட மோட்டார்  பிரேக் இன்ஸ்பெக்டர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க.!