chennireporters.com

படுக்கைக்கு ஒருத்தி குடும்பம் நடத்த ஒருத்தி சீமானின் சிம்பிள் சிட்டி வாழ்க்கை.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை மாற்றிக் கொண்டார். ஆனால்  தாலி கட்ட மறுத்தார் காரணம் தான் ஒரு பெரியார் என்றும் கிறிஸ்தவர் என்றும் சொன்னார்.ஆனால் நடிகை விஜயலட்சுமி தான் என் மனைவி என்று தன் அம்மா மீது சத்தியம் வைத்து திருமணம் செய்து கொண்டாத தெரிவித்த விஜயலட்சுமி  பின்னாலில் என்னை ஓரங்கட்டி விட்டு முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் இரண்டாவது மனைவியின்  மகளை திருமணம் செய்து கொண்டு என்னை ஏமாற்றினார்.இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு போலீசில் விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார் அதன் பிறகு சீமான் தரப்பிலிருந்து பல கொலை மிரட்டல்கள் வருவதாக சொன்ன விஜயலட்சுமி ஒரு கட்டத்தில் சீமானுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.அதில் என் பொண்டாட்டி என் பொண்டாட்டி  சொல்லுங்க மாமா என சொல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீமானின் வண்டவாளம் தண்டவாளம் ஏறியது. சீமானின் யோக்கியங்கள் உலக நாடுகள் முழுவதும்  தெரிந்தது. உலக தமிழர்கள் சீமானை காரி துப்பினார்கள். புரட்டி புரட்டி அடித்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல சீமான் வெட்கமில்லாமல் சுற்றிக் கொண்டுதான் இருந்தார்.இதற்கிடையில் விஜயலட்சுமி ஒருமுறை  மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொள்ள  முயற்சி செய்தார். பின்னர் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் விஜயலட்சுமியை நேரில் வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆனால் அந்த வழக்கில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்  28ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் அளிக்கப் போவதாகவும் திமுக அரசு தனக்கு நீதி வாங்கித் தர வேண்டும் என்றும் விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதன்படி இன்று (ஆகஸ்ட் 28 ம்தேதி) கமிஷனர் ஆபீசுக்கு நேரில் வந்து புகார் அளித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  சீமானை உறுதியாக கைது செய்ய வைப்பேன்.  உங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து எனக்கு ஆதரவு தாருங்கள் என்று பத்திரிகையாளர்களிடம் அழுது கண்ணீர் விட்டார். அவரை கைது பண்ண வைக்காமல் விட்டது தான் நான் செய்த பெரிய தவறு ஆனால் தற்போது அவரை கைது செய்ய வைக்காமல் விடமாட்டேன் என்று கோபம் பொங்க பேசினார்.அதிமுக அரசு கடந்த காலத்தில் சரியாக விசாரணை செய்யாமல் என்னை ஏமாற்றி விட்டது என்றும் கூறினார். இந்நிலையில் சில பத்திரிகையாளர்கள் காலதாமதமாக வந்து புகார் அளிப்பதற்கு என்ன காரணம் என்று கேள்வி கேட்டனர். அதற்கு விஜயலட்சுமி நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்னை அவமானப்படுத்த வேண்டாம் என்று என்னிடம் சமாதானம் பேசியதின் அடிப்படையில் நான் அமைதியாக இருந்தேன் ஆனால் அவர் சொன்னதைப் போல நடந்து கொள்ளவில்லை.எனவே திமுக அரசு என் நிலையை நினைத்து என் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். சீமான் என்னுடன் இருந்ததற்கு பலவிதமான புகைப்படங்கள் வீடியோக்கள் ஆடியோக்கள் இருக்கின்றன. ஆனால் தற்போது சீமான் நான் அவருடன் எந்தவித தொடர்பிலும் இல்லை வீடியோக்களும் இல்லை என்று கூட பொய் சொல்லுவார் சீமானின் உண்மை முகத்தை கிழித்து உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவேன் என்று ஆவேசம் பொங்க அழுது கொண்டே பத்திரிகையாளர்களிடம் பேசினார் நடிகை விஜயலட்சுமி.

சீமானுக்கு ஜால்ரா தட்டும் சில பத்திரிகையாளர்கள் சொம்பு தூக்கிகள் இப்போதே யார் உடலில் உள்ள மலத்தை கழுவி விடப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக  அண்ணனின் காமகளியாட்டம் குறித்து சீமான் படையின் பெண் புலி காளியம்மாள் விஜயவட்சுமி புகார் குறித்து என்ன சொல்லப்போகிறார் என பார்போம்.

இதையும் படிங்க.!