chennireporters.com

# BJP MS Shah தனியார் சொகுசு விடுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தமிழக பாஜக பிரமுகர்.

மதுரை திருமங்கலத்தில் தனியார் சொகுசு விடுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  தமிழக பாஜக பிரமுகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் காவல் துறைக்கு பயந்து தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க போலிசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா.

பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார்.

பாஜக தலைவர்களோடு நெருக்கமாக இருந்து வரும் எம்.எஸ். ஷா, அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில், எம்.எஸ்.ஷா மீது 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் தந்தை, மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது மகளின் செல்போனுக்கு, பாஜக பிரமுகர் ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து இருந்து தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் வந்துள்ளதாகவும், இதையடுத்து தனது மகளிடம் கேட்டபோது, தனது மனைவி, மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் அடிக்கடி தனியார் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, பாஜக பிரமுகருடன் தனியாக இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா.

மேலும், வாட்ஸ் அப் மூலமாக, நான் அழைக்கும் இடத்திற்கு வந்து என்னுடன் தங்கினால் பைக் வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தையைக் கூறி அழைத்துச் சென்று 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனார்.

இதைத் தொடர்ந்து வேறு மாநிலங்களுக்கும் அழைத்துச் சென்று தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, சிறுமிக்கு புதிய ஆடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளார்.

பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா.

பாஜக பிரமுகர் எம்.எஸ். ஷா, முதலில் தனது மனைவியிடம் கடனை அடைத்து விடுவதாகக் கூறி திருமணத்தை மீறிய உறவில் இருந்ததோடு மனைவியின் மூலமாக மகளையும் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு தனது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்,

சிறுமியின் தந்தை அளித்த இந்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி எம்..எஸ். ஷா மீதும், மாணவியின் தாய் மீதும் போக்சோ சிறப்பு சட்டம் 11(1), 11(4), 12 ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி நடத்தி வரும் பாஜக நிர்வாகி மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுக்க பாஜக பிரமுகர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் திருவள்ளூர் பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதி சசிகலா எம் பி யை பாலியல் சீண்டலில் ஈடுபடும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது இதனால் அவருக்கு பாஜகவினரே ஓட்டு போடுவார்களா என்பது சந்தேகமாக உள்ளது என்கிறார் திருவள்ளூரை சேர்ந்த பாஜக பெண் பிரமுகர் ஒருவர்.

சசிகலா புஷ்பாவுடன் பாஜக திருவள்ளூர் வேட்பாளர் பாலகணபதி.

மேலும் குற்ற குற்றப் பின்னணி உள்ளவர்களும் செம்மர கடத்தல் வியாபாரிகளும் கூலிக்கு கொலை செய்யும் கூலிப்படையினரும் பாஜகவில் தங்களது உயிரையும் உடைமையும் காப்பாற்றிக் கொள்ள நினைத்துக் கொண்டுள்ளனர். தேர்தல் நேரம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் பாஜக பிரமுகர்கள் செய்த பிராடுத்தனங்களையும் பாலியல் சீண்டல் தொடர்பான வீடியோக்களையும் திமுகவை சேர்ந்த கூட்டணியினர் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க.!