chennireporters.com

ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம். 16 பேருக்கு பதவி உயர்வு.

நெல்லை கமிஷனர், மதுரை எஸ்பி., உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்.  தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். நெல்லை கமிஷனர், மதுரை, தேனி, அரியலூர் உள்ளிட்ட மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் டிஐஜிக்கள் மாற்றப்பட்டனர். அவர்களில் 16 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக உள்துறைச் செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழ்சந்திரன்- பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி, மூர்த்தி- நெல்லை கமிஷனர்
டிஐஜி.,க்கள்,உமா- சேலம் சரக டிஐஜி, சரோஜ்குமார்- வேலூர் சரக டிஐஜி, ஜியா உல் ஹக்- தஞ்சாவூர் சரக டிஐஜி,திஷா மிட்டல்- விழுப்புரம் சரக டிஐஜி, மனோகர்- திருச்சி சரக டிஐஜி, மகேஷ்- உளவுத்துறை ( உள்நாட்டு பிரிவு) டிஐஜி, பகலவன்- சிஐடி உளவுப்பிரிவு டிஐஜி,ராமர் -ரயில்வே டிஐஜி,ஜெயந்தி -கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி,திருநாவுக்கரசு- உளவுத்துறை ( பாதுகாப்பு) டிஐஜி,தேவராணி வட சென்னை போக்குவரத்து இணை கமிஷனர் மற்றும் டிஐஜி,மகேஷ்குமார் – தென் சென்னை போக்குவரத்து இணை கமிஷனர் மற்றும் டிஐஜி,வெண்மதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு டிஐஜி,ஜெயச்சந்திரன்- ஊழல் தடுப்பு மற்றும் விஜிலென்ஸ் துணை இயக்குநர் மற்றும் டிஐஜி

எஸ்.பி.,க்கள் டோங்ரே பிரவின் உமேஷ்- மதுரை மாவட்ட எஸ்.பி.,,சிவ பிரசாத் – தேனி மாவட்ட எஸ்.பி.,,தங்கதுரை- கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.,,சந்தீஷ் – ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.,, பெரோஸ்கான்- விருதுநகர் மாவட்ட எஸ்.பி.,,செல்வராஜ்- அரியலூர் மாவட்ட எஸ்.பி.,,சண்முகம்- காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.,,தீபக் சிவாச்– விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.,,மேகலினா ஐடன் – தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் எஸ்.பி.,,புக்யா ஸ்நேகா பிரியா- பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.,,ராமகிருஷ்ணன் – சிவில் சப்ளை துறை எஸ்பி,கிங்ஸ்லின்- – பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி., சசி மோகன்- கோவை, பயங்கரவாததடுப்பு பிரிவு எஸ்.பி., ஷசாங்க் சாய்- கியூ பிரிவு எஸ்.பி.,

துணை கமிஷனர்கள்,பண்டி கங்காதர் – தென் சென்னை போக்குவரத்து துணை கமிஷனர்,அனிதா மதுரை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்,சுதாகர் – மவுன்ட் தாமஸ் துணை கமிஷனர்,சரவணகுமார்- கோவை தெற்கு துணை கமிஷனர்,கீதா- – நெல்லை மேற்கு துணை கமிஷனர்,விஜயகுமார்- சென்னை மேற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர்,மகேஷ்வரி- தாம்பரம் போக்குவரத்து கூடுதல் கமிஷனர்.,ராஜேந்திரன்- ஆவடி போக்குவரத்து மற்றும் தலைமையிடத்து கூடுதல் கமிஷனர் ,ஐஜி.,க்கள், ஜெயகுமார்- போலீஸ் பயிற்சி கல்லூரி ஐஜி,ராதிகா- குற்றப்பிரிவு ஐஜி,மல்லிகா- போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜி,முத்துசாமி தமிழக போலீஸ் அகடமி கூடுதல் இயக்குநர் மற்றும் ஐஜி,ராஜேஸ்வரி -தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் மற்றும் ஐஜி,லஷ்மி- னெ்னை தலைமையிடத்து ஆயுதப்பிரிவு ஐஜி,சாமூண்டீஸ்வரி- மனித உரிமை மற்றும் சமூக நீதி ஐஜி ஆக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க.!