chennireporters.com

செல்போன் டாக்கிங் நள்ளிரவில் நடந்த பயங்கரம்.

கவிதா

போன் அடிக்கடி பேசாதே என்று எவ்வளவோ சொல்லியும் அவள்கேட்கவில்லை தொடர்ந்து யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டே இருந்தாள் இதனால் மட்டையை எடுத்து ஒரே ஒரு போடு போட்டேன் அவள் இறந்து போய்விட்டாள்.

போலீசார் கைது செய்த போது இப்படி சொல்லி இருக்கிறார். மனைவியை கொன்ற கணவன் கோவை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கவிதா (35) இவருக்கு திருமணமாகி விட்டது.

குமார்.

ஆனால் கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு அவரை விட்டு பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார் ஆனால் அதே பகுதியில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தார் கவிதா.

அப்போது குமார் என்கிற லவேவிந்திரனை இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டார்.குமார் ஒரு இலங்கை அகதி இவர்களின் திருமணம் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.இப்போது கவிதாவுக்கு 32 வயதாகிறதுஇவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

அதே பகுதியில் பழைய கட்டிடங்களை உடைக்கும் வேலையை செய்து வருகிறார் குமார் இந்நிலையில் கவிதா அடிக்கடி யாருடனோ போனில் பேசிக் கொண்டே இருந்துள்ளார் இதை பலமுறை குமார் பார்த்துவிட்டு மனைவியை கண்டித்துள்ளார்.

ஆனாலும் கவிதா குமார் பேச்சை கேட்கவில்லை.இதுவே தகராறு ஆக மாறியது தன்னால் போன் பேசாமல் இருக்க முடியாது என்று கவிதா கறாராக சொல்லிவிட்டார் குமாருடன் நடந்த சண்டையில் கவிதா கோபித்துக் கொண்டு நண்பர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

நண்பர்வீட்டிற்குகவிதாசென்றதால்குமாருக்குமேலும்கோபம்வந்துவிட்டது இந்நிலையில்மறுபடியும் கவிதா சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார் குமார்.

வீட்டிற்கு வந்தவுடன் குமாருக்கும் கவிதாவுக்கும் மீண்டும் பிரச்சனை வெடித்தது இரவெல்லாம் இருவரும் சண்டை போட்டுக் கொண்டே இருந்தனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த குமார் மகன் விளையாட வைத்திருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து கவிதாவின் மண்டையிலேயே அடித்துவிட்டார்.

கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர் ஆனால் அதற்குள் கவிதாவின் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

ஆட்களைப் பார்த்ததும் குமாரும் தப்பி ஓடி விட்டார் இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது போலீசார் குமாரை தேட ஆரம்பித்தனர்.

அப்போது தான் ஆலந்துறை அருகே உள்ள பூலுவப்பட்டி பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் குமார் பதுங்கி இருந்தார் குமாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

குமார் அளித்த வாக்குமூலத்தில் தன் மனைவி கவிதா பற்றி பல திடுக்கிடும் தகவல்களை சொல்லி இருக்கிறார்.

இதையும் படிங்க.!