chennireporters.com

பனையூர் பண்ணை வீட்டில் நடந்த வி.ஐ.பிகள் விபச்சாரம் சிக்கிய கணவன் மனைவி.

சென்னையை அலற வைத்த குடும்பப் பெண்களின் பாலியல் தொழில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூரில் ஒரு பண்ணை வீட்டில் நடந்த பாலியல் தொழிலில் கலந்து கொண்ட விஐபிகள் தலை தெரிக்க ஓடிய சம்பவம் சென்னை மற்றும் தாம்பரம் மாநகர காவல் துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார், ஜெயலட்சுமி  தம்பதி இருவரும் சேர்ந்து கடந்த 2018ம் ஆண்டு முதல் முகநூலில் real married swap party couples என்ற பக்கத்தை உருவாக்கி அதில் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சி நவம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதி சென்னையில் நடக்கும் என்று கூறி இருந்தனர். இது தொடர்பான அறிவிப்பும் சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் ஒரு பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். இது தொடர்பாகவும் சமூக வலைதளத்தில் அழைப்பு விடுத்திருந்தனர்.

கடந்த சனிக்கிழமை  அன்று கணவன் மனைவி என கூறிக் கொண்டு 20க்கும் மேற்பட்ட ஜோடிகளும், அவர்களுடன் இளைஞர்கள் மற்றும் சில நடுத்தர வயது பெருசுகளும் வந்துள்ளனர். மாலை ஏழு மணியிலிருந்து  மது, மங்கை என ஆட்டம் பாட்டம்  கொண்டாட்டம் தொடங்கியது. பண்ணை வீட்டில் அதிக சத்தத்துடன் பாடல் சத்தம் கேட்டதும் பக்கத்து வீட்டிலிருந்த விஐபிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

இதையடுத்து பனையூரில் உள்ள பண்ணை வீட்டிற்கு போலீசார் சென்றனர். அங்கு அதிக சத்தத்துடன் பார்ட்டி உச்சகட்டத்தில் இருந்தது. போலீசார் கதவை திறந்த உள்ளே சென்று பார்த்த போது அங்கு அரை குறை ஆடையுடன் இருந்த பெண்கள் போதை தலைக்கேறி ஆடிக்கொண்டிருந்தனர். போலிசாரை பார்த்த்தும் அறையில் ஓடிப்போய் ஒளிந்து கொண்டனர். இதனையடுத்து  போலிசார் அதிரடியாக வீடு முழுவதும் சோதனை செய்தனர். இதில் பலர் கையும் களவுமாக சிக்கினார்கள். இதில் ஒரு சில குட்டி பிசினஸ்மேன்களும் சில விஐபிகளும் போலிசிடம் சிக்கி கெஞ்சி தப்பி ஓடினார்கள். கடைசியில்  8 பெண்கள், 15 ஆண்களை சுற்றி வளைத்தனர்.

 

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையின் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. ஒரு நபருக்கு மது மற்றும் மாது விருந்திற்கு 13000 ரூபாய் முதல் 20000 ரூபாய்  கட்டணமாக பணம் வசூலித்துள்ளனர்.  கணவன் மனைவிகளை மாற்றிக் கொண்டு குழுவாக உடலுறவு கொண்டு பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.

சிக்கியவர்களில் கணவன், மனைவியாக வந்திருந்த சிலர் வறுமையின் காரணமாக, குடும்பசூழ்நிலையினால் இந்த தொழிலில் வந்து விட்டதாக கண்ணீர் விட்டு கதறியுள்ளனர். சிலர் தனது கள்ள காதல் ஜோடிகளை அவுட்டிங் அழைத்து  வந்திருந்தனர். வந்தவர்கள்  திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், விருதுநகர், திருநெல்வேலி என பல பகுதிகளில் இருந்து வந்திருந்தனர்.

சிலர் வீடுகளுக்கு தெரியாமல் மனைவிகளிடம் பொய் சொல்லிவிட்டு வந்திருந்த ஆண்கள் செய்வதறியாது திகைத்தனர். காவல்துறையினர் அவர்களது வீட்டிற்கு தெரியபடுத்தி உறவினர்களை வரவழைத்து எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.  8 பெண்களின் கணவர்கள் என கூறிய நபர்கள் மீது விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 100க்கும் மேற்பட்ட ஆணுறைகள், பாலுணர்வை தூண்டும் மாத்திரைகள், மதுபாட்டில்கள்,சிறிய அளவில் கஞ்சா, ஹூக்கா போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

காவல்துறையில் சிக்கிக் கொண்டால் பர்த்டே பார்ட்டி என கூறி அதற்கு பிறந்த நாள் இருக்கும் ஒரு நபரை உடன் வைத்துக் கொண்டு நூதன முறையில் 5 ஆண்டுகளாக விபச்சார தொழில் செய்து வந்துள்ளனர்.

இதனையடுத்து மேட்டுப்பாளையம்பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(48),குமார் (45),மதுரையைச் சேர்ந்த சந்திர மோகன் (41),சிதம்பரத்தைச் சேர்ந்த சங்கர் (35),சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த வேல்ராஜ் (40),திருநெல்வேலியை சேர்ந்த செல்வம் (37), திருக்கோவிலுரைச் சேர்ந்த பேரரசன் (32) மற்றும் திருச்சியை சேர்ந்த வெங்கடேஷ் குமார் (45) ஆகிய 8 பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பல பகுதிகளில் உள்ள பண்ணை வீடுகளில் பார்ட்டி என்கிற பெயரில் பல ஆண்டுகளாக விபச்சாரம் நடந்து வருவதாக சொல்கிறார்கள் அந்த பகுதி வாழ் மக்கள்.

இதையும் படிங்க.!