chennireporters.com

மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை உச்ச நீதிமன்றம் கருத்து.

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கும் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்று சொல்லி இருப்பது மிகமிக முக்கியமானது ஆகும்.

ஆளுநர் செயல்படாத நேரத்தில் நீதிமன்றம் தலையிடும் என்று சொல்லி இருக்கிறார்கள் நீதிபதிகள் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசிடம் கேட்கத் தேவையில்லை என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள் நீதியரசர்கள்.

இதன் மூலமாக மாநில அரசின் அரசியல், கொள்கை முடிவுகளில் தனது அதிகார எல்லைகளைத் தாண்டி ஆளுநர்கள் தலையிட அதிகாரம் இல்லை என்பது மேலும் மேலும் உறுதி ஆகி இருக்கிறது.

இது தமிழ்நாடு அரசால், இந்தியா முழுமைக்குமான மாநில சுயாட்சி – கூட்டாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசியல் சட்டம் 161வது பிரிவின் படி மாநில அரசின் உரிமையை நிலைநாட்டி அவர்களது விடுதலைக்கு தொடர்ந்து திமுக குரல் கொடுத்து வந்தது.எதிர்க்கட்சியாக இருந்தபோதும், ஆளும் கட்சியாக ஆனபோதும் ஒரே நிலைப்பாட்டை திமுக எடுத்தது.SC Judgement on Perarivalan (4)

ஆளும்கட்சியாக ஆனபிறகும் குடியரசுத் தலைவருக்கு கடிதம் ஆளுநருக்கு அழுத்தம் ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தல் உச்சநீதிமன்றத்தில் அழுத்தமான வாதங்கள் என நாலா பக்கமும் முனைப்புடன் திமுக அரசு இயங்கியது.

இறுதித் தீர்ப்பு இந்த அடிப்படையில் கிடைக்க இவை மிக முக்கியமான அடித்தளத்தை அமைத்திருந்தது என்றுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

சிறையில் இருந்த பேரறிவாளன், சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

அவர் சட்ட உரிமையின் அடிப்படையில் பரோல் கேட்டார். மனிதாபிமான அடிப்படையில் அரசு அவருக்கு அந்த உரிமையை 10 முறை வழங்கியது.

பரோலில் இருந்தபடியே தனது சட்டப்போராட்டத்தை நடத்தி முதலில் பிணையில் வந்தார். இப்போது விடுதலை ஆகி இருக்கிறார் முப்பத்தி இரண்டு ஆண்டு கால வாழ்வை சிறைக் கம்பிகளுக்கு இடையே தொலைத்த அந்த இளைஞர்

இன்று விடுதலைக் காற்றை சுவாசிக்க இருக்கிறார் அவருக்கு என் வாழ்த்துகளும், வரவேற்பும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க.!