chennireporters.com

ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரவைத்த செய்தி. கதறும் காக்கிகள்.

ஐபிஎஸ் அதிகாரிகளின் மன்மத லீலைகள் பற்றியும் அவர்கள் கல்லாகட்டிய செய்திகள் பற்றியும் ஐபிஎஸ் அதிகாரிகளின் வாட்ஸ் அப் குழுவில் ஒரு செய்தி கடந்த இரண்டு நாட்களாக காட்டுத் தீயாய் பரவி வருகிறது. அந்த செய்தி குறித்து நாம் களத்தில் இறங்கி விசாரித்தோம். கிடைத்த தகவலை சில கண்ணியமிக்க காக்கிகளுக்கும், வாசகர்களுக்கும் நாம் விரிவாக எடுத்துரைக்கிறோம்.*** ஐபிஎஸ் அதிகாரிகளே உஷார். RED ALRET PART ONE.  SPCIAL STORY. ***

உங்கள் பெயரைப் பயன்படுத்தி தொழிலதிபர்களிடம் வசூல் செய்யும் புரோக்கர்கள் சிலர் தமிழகத்தில் அமைச்சர்கள் ரேஞ்சுக்கு சகல வசதியுடன் பந்தாவுடன் உலா வருகின்றனர். ஸ்காட்லாண்டு யார்டு போலீசுக்கு இணையான தமிழக காவல்துறைக்கு அவ்வப்போது களங்கமும், கெட்டப்பெயர் நேர்ந்தாலும் அதனை சரிகட்டி மீண்டும் நல்ல பெயர் பெற்றுத்தருவது உயர் பதவியில் இருக்கும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் தான்.

ஓரளவுக்கு நேர்மையான அதிகாரிகள் இருக்கும் தமிழ்நாடு காவல்துறையில் ஐபிஎஸ்களுக்கு குட்டி மற்றும் புட்டி ஆசை காட்டி கரன்சியை குவித்து அவர்களை கிறங்கச் செய்யும் சில செக்ஸ் புரோக்கர்களால் ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கள் வாழ்க்கையை இழப்பது மட்டுமின்ற பொதுமக்கள் பாதிப்படையும் அளவுக்கு சென்று விடுகிறது.

புரோக்கர்கள் போல செயல்படும் சில நபர்களால் தமிழ்நாடு காவல்துறையில் நுரையீரல் மட்டுமல்ல கல்லீரல், கிட்னி, மண்ணீரல் அனைத்துமே கெட்டுப்போய் விட்டது என காமெடியாக சொல்லும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. ஏன்? கெட்டே போய் விட்டது’ என்று உறுதியாகக் கூட சொல்லலாம். இந்த செக்ஸ் புரோக்கர்கள் தொடக்கத்தில் ஒரு விஐபி அறிமுகத்துடன் சென்று ஐபிஎஸ் அதிகாரிகளை சந்திக்கின்றனர். சிலர் தங்களை பெரும் பணக்காரர் போல காட்டிக் கொண்டு நல்லவர்கள் போல ஐபிஎஸ் அதிகாரிகளிடம் பழகி நெருங்கி, ஸ்டார் ஓட்டலில் அவர்களுக்கு இலவசமாக ரூம் போட்டு கொடுத்து பின்னர் பெரிய, பெரிய விவகாரங்களை எடுத்துச் சென்று அதற்காக தங்க பிஸ்கட், தங்கச் செயின், ஐ போன், எல் இ டி , டிவி போன்ற விலை உயர்ந்த சன்மானங்களை அட்வான்ஸ் பரிசாக வழங்கி ஐபிஎஸ் அதிகாரிகளை தங்கள் பக்கம் இழுக்கின்றனர். அதற்கும் மேலாக ஒரு படி மேலே போய் பலான ஆசையையும் காட்டி தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர். அதன் மூலம் அந்த அதிகாரியை வைத்து இன்னொரு ஐபிஎஸ் அதிகாரியை பிடித்து நட்பு ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

அதன் மூலம் தங்களுக்கென்று தனி lobby ஏற்படுத்திக் கொண்டு உட்கார்ந்த இடத்திலேயே காரியம் சாதிக்கின்றனர் இந்த டுபாக்கூர் புரோக்கர்கள். இது போன்ற புரோக்கர்கள் தங்களிடம் உதவி கேட்டு  தேடி வரும் நபர்களிடம் நியாயம், அநியாயம் பார்ப்பதில்லை. தான் எதிர்பார்த்த கரன்சி நோட்டுகள் கிடைக்குமா என்று மட்டுமே பார்க்கின்றனர். ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தர வேண்டும் என கட்டுக்கட்டாக பணத்தை கறக்கும் இவர்கள் அதனை அங்கு கொண்டு போய் சேர்ப்பதில்லை. அந்த ஐபிஎஸ்கள் பெயரை பயன்படுத்தியே தங்கள் பினாமி வங்கிக் கணக்கில் வரவு வைத்து கொள்கின்றனர். குட்டிக்கும், புட்டிக்கும் மயங்கும் சில சபல ஐபிஎஸ் அதிகாரிகள் இது போன்ற புரோக்கர்கள் வலையில் விழுந்து தங்கள் வாழ்க்கையையும் வீணடித்துகொள்கின்றனர்.பெரும்பான்மையான நேர்மையான, ஒழுக்கமான மற்றும் சில உஷாரான ஐபிஎஸ் அதிகாரிகள் இந்த விவகாரம் பிடித்த ‘செக்ஸ் புரோக்கர்களை’ தங்கள் அலுவலகத்துக்குள் அனுமதிப்பதில்லை. இந்த ‘புரோக்கர்களுக்காக பரிந்துரை செய்யும் விஐபிக்களுக்கு மரியாதை கொடுத்து அந்த புரோக்கர்கள் கேட்கும் வேலையை மட்டும் செய்து கொடுத்து விட்டு நமக்கேன் இந்த வம்பு என ஒதுங்கிக்கொள்கின்றனர்.

அதற்கு சிறந்த உதாரணம் சென்னையில் கேபிள் டிவி நடத்தி வந்த ஒரு தனி நபர் அதன் மூலம் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு ஒரு டிஜிபியையே தன் கைவசம் வைத்துக் கொண்டு ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டார். மேலும் ஒரு பிரபல தினமும் மலரும் பத்திரிகையில் வேலை செய்து வந்த சென்னை கமிஷனர் அலுவலக நிருபர் ஒருவரையும் தன்னுடன் பார்ட்னராக சேர்த்து அவருக்கும், அவர் சொல்லும் காவல் அதிகாரிக்கும் வெளிநாட்டு  வெளிநாட்டு புட்டி (சீமைசரக்கு) மற்றும் லோக்கல் குட்டி என்று சப்ளை செய்து தனது கரன்சி காரியங்களை சாதித்துக் கொண்டு கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த கதை அனைத்து பத்திரிகை பிரமுகர்கள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் தெரியும் என்கிறார்கள்போலிஸ்அதிகாரிகள்.

தற்போது அந்த நிருபர் வேலையையும் இழந்து, வாழ்க்கையையும் இழந்து பத்திரிகை துறையை விட்டே சென்று விட்டாராம்.  இந்த கேபிள் டிவி நபரை நம்பிய அந்த முன்னாள் டிஜிபி கடைசியில் மிகப்பெரிய ஊழல் வழக்கில் சிக்கி கை சேதமடைந்து சிறைக்கு செல்லாமல் ஓய்வு பெற்று விட்டார். அவர் அந்த வழக்கை சிபிஐயில் எதிர் கொண்டு மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகி இன்று வரை நிம்மதி இல்லாமல் தவிக்கிறார்.

 

இந்த கேபிள் டிவி நபருக்கு நெருக்கமான மற்றொரு முன்னாள் டிஜிபியும், ஒரு ஐஜியும் பாலியல் வழக்கில் ஆதாரத்துடன் வசமாக சிக்கி சின்னா பின்னமாகியுள்ளனர்.  இந்த கேபிள் டிவி நபரைப் போல திண்டுக்கல்லைச் சேர்ந்த இன்னொரு மூன்று எழுத்து நபர் தனது ‘காக்கி புரோக்கிங் பணி’யை கச்சிதமாக செய்து வருகிறார். அவர் செய்து வரும் அட்டூழியங்கள் பற்றி அடுத்த தொடரில் வெளி வரும்.

 

 

இதையும் படிங்க.!