chennireporters.com

ரயில்வே பணிகளை முடித்து தர வேண்டும் ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்.பி வேண்டுகோள்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டப் பணிகளை முடித்து தர வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு திமுக எம்.பி கனிமொழி கோரிக்கை வைத்துள்ளார்.

 

டெல்லியில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் அவர்களைச் சந்தித்து, திமுக எம்.பி கனிமொழி தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலுவையிலுள்ள பல்வேறு ரயில்வே திட்டப்பணிகளை விரைந்து முடித்துத் தரும்படி திமுக எம்.பி கனிமொழி கோரிக்கை வைத்து கடிதம் அளித்தார்.

மும்பையிலிருந்து மதுரை வரையிலான ‘லோக்மான்ய திலக் விரைவு வண்டி’ தூத்துக்குடி வரை நீட்டிப்பது, மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இடையிலான புதிய சேவை, முன்பு அறிவித்திருந்த தாம்பரம் – செங்கோட்டை இடையிலான வாரம் மூன்று ரயில்கள், ராமேஸ்வரம் – மங்களூர் இடையில் புதிய சேவை, கோவிட் ஊரடங்கின் போது நிறுத்தப்பட்ட பாலக்காடு – பொள்ளாச்சி பயணிகள் வண்டி சேவையை மீண்டும் தொடங்குவது, காயல்பட்டினம் ரயில்நிலைய நடைமேடையை மேம்படுத்துவது போன்ற கோரிக்கைகளை விரைவில் முடித்து தர வேண்டும் என்று  கனிமொழி கருணாநிதி எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க.!