chennireporters.com

வீதியில் நிற்கும் ரேமன்ட் கம்பனி நிறுவனர் விஜய் பாத் சிங்கானியா..!!

ரேமன்ட் கம்பனி நிறுவனர் விஜய் பாத் சிங்கானியா. பார்மல் ஆடை என்றால் ரேமண்ட் என பெயர் வாங்கியவர். ஒரு காலத்தில் அம்பானியுடன் போட்டியிட்டு தொழில் செய்தவர். இன்று இவர் நடுத்தெருவில் நிற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.இவருக்கு இரு மகன்கள். மூத்தமகன் பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் சண்டை போட்டுக்கொண்டு “நீங்க யாரும் வேண்டாம்” என சொல்லிவிட்டு சிங்கப்பூருக்கு போய் செட்டில் ஆகிவிட்டான்.

2015ல் இளையமகன் கவுதம் சிங்கானியாவுக்கு நிறுவனத்தை மாற்றி, நிர்வாக இயக்குநராக நியமித்தார். எல்லா சொத்துக்களையும் மகன் கவுதம் சிங்கானியாவின் பெயரில் மாற்றி எழுதினார். அப்பாவின் ஒரே எதிர்பார்ப்பு, மகன் வசிக்கும் “ஜேகே இல்லத்தில் தானும் தங்கலாம்” என்பதாக இருந்தது.

ஜேகே ஹவுஸ் இந்தியாவின் மிக விலை உயர்ந்த இரண்டாவது வீடு. அம்பானி வீட்டிற்கு அடுத்ததாக விலைமதிப்பு வாய்ந்தது. அதில் விஜய் சிங்கானியா கேட்டது ஒரு அறை. அதை கொடுக்க மகன் மறுத்துவிட்டார். அதன்பின் அப்பா மகனைத் திட்ட, நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அப்பா விலக்கப்பட்டு, விரட்டி அடிக்கப்பட்டுவிட்டார்.இப்போது தன் 85வது வயதில் மும்பையில் ஒரு அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார் விஜய் சிங்கானியா. “செலவுகளைச் சந்திக்க பணம் போதவில்லை. வறுமையில் இருக்கிறேன்” என்று கூறுகிறார்.

பிசினஸ் பிஸ்தாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மனித பண்புகளையும், உறவுகளையும் மதிக்க கற்றுக்கொடுக்கவேண்டும். சும்மா பணம் சம்பாதிக்க மட்டும் கற்றுக்கொடுத்தால்  போதாது. மனித மாண்பையிம் அன்பையும் கற்று தரவேண்டும்  இல்லையெனில் அது நமக்கே வினையாக வந்து முடியும்.

 

இதையும் படிங்க.!