chennireporters.com

விசாரணைக்கு பயந்து அஞ்சி நடுங்கும் சீமான்.

நடிகை விஜயலட்சமியுடன் குடும்பம் நடத்தி 7 முறை கருச்சிதைவு செய்த விவகாரம் தொடர்பாக, வளசரவாக்கம் போலீசார் அனுப்பிய சம்மன் படி நேற்று இயக்குநர் சீமான் நேரில் ஆஜராகவில்லை. அவருக்குப் பதில் அவரது வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அதைதொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து சட்ட நிபுணர்களிடம் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி கடந்த மாதம் 28ம் தேதி இயக்குநர் சீமான் மீது இரண்டாவது முறையாகப் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், இயக்குநர் சீமான் இயக்கத்தில் ‘வாழ்த்துக்கள்’ என்ற திரைப்படத்தில் நடித்தபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்தப் பழக்கத்தில் இயக்குநர் சீமான் தன்னை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை மாற்றித் திருமணம் செய்து கொண்டு, மதுரையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலிரவு நடந்ததாக விஜயலட்சுமி தெரிவித்து இருந்தார். சீமானுடன் கணவன் -மனைவியாக வாழ்ந்து வந்ததன் பயனாக 7 முறை கருவூற்றேன். பிறகு சீமான் கட்டாயப்படுத்தி கருச்சிதைவு செய்தார். அதன் பிறகு என்னை விட்டுவிட்டு கயல்விழி என்பவரைத் திருமணம் செய்து கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார். இதுகுறித்து கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அளித்த புகாரின்படி வளசரவாக்கம் போலீசார் கடந்த 2011ம் ஆண்டு இயக்குநர் சீமான் மீது ஐபிசி 417, 420, 354, 376, 506(1) மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அப்போது அதிமுக ஆட்சி என்பதால் இயக்குநர் சீமான் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், இயக்குநர் சீமான் தனது கட்சியின் முக்கிய நிர்வாகியான மதுரை செல்வம்மூலம் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த 2023 மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம்வரை சீமான் தரப்பு சொன்னபடி மாதம் ரூ.50 ஆயிரம் பணம் அனுப்பியுள்ளனர். அதற்குப் பிறகு பணம் அனுப்பவில்லை. இதுகுறித்து கேட்டபோது, மதுரை செல்வம் என்பவர்மூலம் சீமான் ஆபாச வீடியோ அனுப்பி சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவதாக மிரட்டி வருவதாகப் புகார் அளித்தார். புகாரின்படி, நடிகை விஜயலட்சுமியிடம் வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் ராமாபுரம் காவல் நிலையத்தில் வைத்து 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

 

எதிர்பார்த்த நிலையில், அவர் நேற்று நேரில் ஆஜராகவில்லை. அவருக்குப் பதில் அவரது வழக்கறிஞர் சங்கர் தலைமையில் 6 வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் ஆஜரானார்கள். அப்போது காவல் நிலையத்தில் இருந்த கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி ஆகியோரை சந்தித்து, சீமான் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் காரணமாக அவர் தற்போது வெளியூரில் உள்ளார். இதனால் நேரில் ஆஜராக முடியவில்லை. எனவே மற்றொரு நாள் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கும்படி ஒரு மனு கொடுத்தனர்.

மேலும், சீமான் மீது 2011ம் ஆண்டு நடிகை விஜயலட்சமி அளித்த புகார் சமாதானம் அடிப்படையில் முடித்து வைக்கப்பட்டது. ஆனால் தற்போது சீமான் மீது அளித்த புகார் குறித்த விவரங்களைத் தங்களுக்கு அளிக்கும்படி சீமான் தரப்பில் மற்றொரு மனு விசாரணை அதிகாரியிடம் அளிக்கப்பட்டது. அப்போது போலீசார் தரப்பில், இது பாலியல் தொடர்பான வழக்கு. எனவே நீதிமன்ற வழிகாட்டுதலின் படி குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் தான் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும்.

அதே நேரம் நடிகை விஜயலட்சுமி நீதிபதியிடம் அளித்த வாக்கு மூலம் குறித்து ஆவணங்கள் உங்களிடம் அளிப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி முடிவு எடுப்பதாகச் சீமான் தரப்பு வழக்கறிஞர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் காவல்நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றனர்.  நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் இயக்குநர் சீமானுக்கு நேரில் ஆஜராகச் சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகாமல் தனது வழக்கறிஞர்கள் மூலம் விலக்கு பெற்று வருகிறார். இதனால் போலீசார் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து வழக்கறிஞர்களூடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்

இதையும் படிங்க.!